Saturday, November 9, 2013

Prostitution ring nabbed at chennai. leader woman was working in pallavaram (chennai) POLICE !! news in Tamil


Prostitution ring nabbed at chennai. The Leader woman, one Kamala, was working in pallavaram (chennai) POLICE !! "..இவர்களில் பிடிபட்ட கமலா, பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் வேலை செய்து வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது...."

******************************************

சென்னை பம்மல், குரோம்பேட்டை பகுதியில் விபசாரம் நடத்திய கும்பல் பிடிபட்டது

******************************************

பதிவு செய்த நாள் : Nov 08 | 07:19 pm

சென்னை

சென்னை பம்மல், குரோம்பேட்டை பகுதியில் விபசாரம் நடத்திய கும்பல் பிடிபட்டது.

மாறுவேடத்தில் சோதனை

சென்னை புறநகர் பகுதிகளான சங்கர்நகர், பம்மல், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் சரவணன் உத்தரவின்பேரில் சிறப்பு தனிப்படையினர் பம்மல், குரோம்பேட்டை பகுதிகளில் மாறு வேடத்தில் சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது மாறுவேடத்தில் சென்ற போலீசார், விபசார கும்பலிடம் செல்போனில் தொடர்பு கொண்டு உல்லாசமாக இருக்க விரும்புவதாக தெரிவித்தனர். அதற்கு பம்மல் சாஸ்தா நகரை சேர்ந்த கமலா(வயது 40) என்பவர் தன்னிடம் ஒரு அழகி இருப்பதாக கூறி அழைத்தார்.

ஊர்க்காவல் படையில் வேலை

அதன்படி போலீசார் அங்கு சென்ற போது யமுனா என்ற ஒரு பெண் மட்டும் இருந்தார். உடனே மாறுவேடத்தில் இருந்த போலீசார், மேலும் நிறைய பேர் வருவதாக கூறினார். எனவே அந்த பெண், அருகில் உள்ள மெஸ்சுக்கு மேலும் சில விபசார அழகிகளை வரும்படி அழைத்தார்.

அனைவரும் அங்கு வந்த உடன் மாறுவேடத்தில் இருந்த போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து சங்கர் நகர் போலீசில் ஒப்படைத்தனர். இவர்களில் பிடிபட்ட கமலா, பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் வேலை செய்து வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பிடிபட்ட கமலா, விபசாரத்தில் ஈடுபட்டு வந்த யமுனா(24), மேரி(34), தேவி(31), மகாலட்சுமி(28), சாந்தி(34), மற்றொரு சாந்தி(46) ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒருவர் கைது

இதேபோல் குரோம்பேட்டை, ராதா நகரில் எண் கணித ஜோதிடம் பார்க்கும் இடத்தில் விபசாரம் நடப்பதாக தனிப்படை போலீசாருக்குதகவல் வந்தது. உடனே மாறுவேடத்தில் இருந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அவர்களை அழகிகளிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி அழைத்த அருள்ஜோசப்(66) என்பவரை கைது செய்தனர். பின்னர் அருள்ஜோசப் மற்றும் அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட விஜயா என்ற பெண்ணையும் சிட்லப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்




*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment