Saturday, July 5, 2014

wife arrested on T.N. Hindu Front leader's GRUESOME murder.


Jeeva, a Hindu Munnai (Hindu Front ) leader from Sankarankoil in Kanyakumari, Tamil Nadu,  was found murdered with this throat cut in a gruesome manner with a kitchen knife (aRivAL maNai) . His wife Aiyammal, made a big drama about the incident. Police registered a case and started searching for the culprits in right earnest. Finally the police have zeroed in on Jeeva's wife Aiyammal, who has accepted to killing Jeeva as she claimed that Jeeva was torturing her / ill treating her and had a second wife

===================


 இந்து முன்னணி பிரமுகர் கொலையில் திருப்பம் ~ பரபரப்பு தகவல்

in TamilNadu / by நெடுவாழி / on July 6, 2014 at 11:02 am /

After-slitting-the-throat-of-a-leading-figure-in-the-murder


சங்கரன்கோவில் இந்து முன்னணி பிரமுகர் கொலை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது பரபரப்பு தகவல்கள்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி செயலாளர் ஜீவா என்ற ஜீவராஜ் (வயது 37). இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டின் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடினார்கள். இந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக, கொலை செய்யப்பட்ட ஜீவாவின் மனைவி அய்யம்மாளை (31) நேற்று இரவில் போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பு தகவல்கள்

அவரிடம் நடந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

இந்து முன்னணி பிரமுகர் ஜீவாவும், அவருடைய மனைவி அய்யம்மாளும் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா தேவி என்பவரை, ஜீவா 2–வது திருமணம் செய்துகொண்டார். அதன் பின்புதான் ஜீவாவுக்கும், அய்யம்மாளுக்கும் இடையே வாழ்க்கையில் புயல் வீசியது. கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இருந்தாலும் அய்யம்மாள், ஷர்மிளாதேவி மற்றும் பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் ஜீவா வசித்து வந்தார்.

சமீப காலமாக 2–வது மனைவி ஷர்மிளாதேவியுடன் சேர்ந்து அய்யம்மாளை ஜீவா துன்புறுத்தி வந்தாராம். இதனால் உள்ளூரில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டுக்கு அய்யம்மாள் சென்றுவிட்டார். கணவர் மீது ஆத்திரத்தில் இருந்தார்.

கழுத்து அறுத்துக் கொலை


நேற்று முன்தினம் இரவில் வீட்டுக்கு வெளியே ஜீவா படுத்து இருந்தார். அவருடைய 2–வது மனைவி ஷர்மிளாதேவி வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகளும் தூங்கிவிட்டனர்.

நள்ளிரவில் அங்கு வந்த அய்யம்மாள், கணவர் படுத்து இருந்த படுக்கையைச் சுற்றி மிளகாய் பொடியை தூவியதுடன், ஜீவாவின் முகத்திலும் மிளகாய் பொடியை வீசியுள்ளார். பின்னர் அரிவாள்மனையால் கணவரின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார் என்று தெரிய வருகிறது. இதற்கிடையே சற்று நேரத்தில் ரத்தவெள்ளத்தில் ஜீவா பிணமானார்.

நாடகமாடினார்


அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று காலையில் அந்த கிராம மக்களுக்கு தெரியவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஒன்றுமே தெரியாதது போல் கணவரின் வீட்டுக்கு வந்த அய்யம்மாள், கணவரின் உடலை பார்த்து கதறி அழுது நாடகமாடினார்.

போலீசார் விசாரணைக்கு பின்பு அய்யம்மாள் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில், கணவரை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்தது.

2–வது மனைவியுடன் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதால் கணவரை கொன்றதாக அய்யம்மாள் போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags: Murder, sangarankovil


source
http://newsalai.com/?p=16792

No comments:

Post a Comment