விருதுநகர், செப். 5–
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை குண்டாறு அணை அருகே உள்ள ஒரு தோட்டத்தில் காதல்ஜோடி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்காசி ஏ.எஸ்.பி. அரவிந்தன், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், சப்–இன்ஸ்பெக்டர் பவுன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது அங்கு காதல்ஜோடி ஒன்று கட்டிப்பிடித்த நிலையில் இறந்து கிடந்தனர். அவர்கள் அருகே குளிர்பானம் மற்றும் விஷப்பாட்டில் கிடந்தது. இதனால் இருவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. உடல்கள் அழுகியிருந்ததால் அவர்கள் இறந்து 2 நாட்கள் இருக்கும் என தெரிய வந்தது. போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதற்காக இருவரும் வைத்திருந்த பைகளை சோதனை நடத்தினர். இறந்து கிடந்த பெண்ணின் பையை சோதனை செய்த போது, அதில் ரமாதேவி, வயது 20, கோட்டைபெட்டி, மதுரை என்ற முகவரியும், மதுரையில் உள்ள தனியார் ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் படித்து வருவதற்கான அடையாள அட்டையும் இருந்தது.
வாலிபரின் பையை சோதனை செய்த போது அதில் விருதுநகர் மாவட் டம் பாலன்நகரை சேர்ந்த முனியாண்டி மகன் செந்தில்குமார், வயது 25 என்ற முகவரியும், அங்குள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருவதற்கான அடையாள அட்டையும் இருந்தது. இதனால் 2 பேரும் மதுரை, விருதுநகரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்பட்டது.
இது தொடர்பாக 2 பேரிடமிருந்த செல்போன் எண்கள் மூலம் உறவினர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது, கள்ளக்காதலில் இவர்கள் தற்கொலை செய்திருப்பது தெரியவ்நதது. செந்தில் குமாருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது மனைவி மல்லிகா, தற்போது கர்ப்பமாக உள்ளார்.
செந்தில்குமாருடன் தற்கொலை செய்த ரமாதேவியும், அதே பகுதியில் தான் வசித்து வந்துள்ளார். எனவே அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகாத உறவு தற்கொலையில் முடிந்துள்ளது. இந்தசம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.maalaimalar.com/2013/09/05115749/Virudhunagar-near-2-people-sui.html
No comments:
Post a Comment